இறைமாட்சி
திருக்குறள்:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
ADVERTISEMENTS
நல்வாழ்வுக்கு
வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை
தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி
சேர்ப்பதாகும்.
மு.வ உரை:
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
சாலமன் பாப்பையா உரை:
தேவைப்படுவோர்க்குத்
தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி
விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே
அரசுகளுக்கு விளக்குப் போன்றது.
ADVERTISEMENTS
Gifts, grace, right sceptre, care of people's weal;
These four a light of dreaded kings reveal.
ADVERTISEMENTS
He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.