இறைமாட்சி

திருக்குறள்:
 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
முறையாக
நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி,
அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு
இலக்கணமாகும்.

மு.வ உரை:
பொருள்
வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும்,
காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

சாலமன் பாப்பையா உரை:
பொருள்
வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப்
பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச்
செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.

ADVERTISEMENTS
Translation:
A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends.

ADVERTISEMENTS
Explanation:
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.