இறைமாட்சி
திருக்குறள்:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.
ADVERTISEMENTS
காலம்
தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும்
நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க
வேண்டியவையுமான பண்புகளாகும்.
மு.வ உரை:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
சாலமன் பாப்பையா உரை:
செயல்
ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை
எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை
விட்டு விலகக்கூடாது.
ADVERTISEMENTS
A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong.
ADVERTISEMENTS
These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.