புலவி நுணுக்கம்

திருக்குறள்:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் 
யாருள்ளி நோக்கினீர் என்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப்
பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.

மு.வ உரை:
அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும்,
நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம்
கொள்வாள்.

சாலமன் பாப்பையா உரை:
என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல்,
அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள்
உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச்
சினப்பாள்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என்
சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன்
அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும் என்னை வெகுளாநிற்கும்;
அனைததும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - நீர் என் அவயவமனைத்தும்
நோக்கினீர, அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து? என்று சொல்லி. ('யான்
எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப்
பலரையும் நினைக்கவேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின்',
என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி'? என்றாள்.
'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி
நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில்
யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி
வெகுளும். இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.

Translation:
I silent sat, but thought the more, And gazed on her. Then she
Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'.

ADVERTISEMENTS
Explanation:
Even when I
look on her contemplating (her beauty), she is displeased and says,
"With whose thought have you (thus) looked on my person?".