புலவி நுணுக்கம்
திருக்குறள்:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
ADVERTISEMENTS
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப்
பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.
மு.வ உரை:
அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும்,
நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம்
கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல்,
அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள்
உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச்
சினப்பாள்.
ADVERTISEMENTS
(இதுவும் அது.) நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என்
சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன்
அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும் என்னை வெகுளாநிற்கும்;
அனைததும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - நீர் என் அவயவமனைத்தும்
நோக்கினீர, அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து? என்று சொல்லி. ('யான்
எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப்
பலரையும் நினைக்கவேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின்',
என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி'? என்றாள்.
'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
தனது உறுப்புகளோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை யெண்ணி
நோக்க இருப்பினும், என்னுறுப் பெல்லாம் நீர் காதலித்தவர்களில்
யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி
வெகுளும். இது பார்க்கிலும் குற்றமென்று கூறியது.
Translation:
I silent sat, but thought the more, And gazed on her. Then she
Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'.
ADVERTISEMENTS
Even when I
look on her contemplating (her beauty), she is displeased and says,
"With whose thought have you (thus) looked on my person?".