புணர்ச்சிவிதும்பல்

திருக்குறள்:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் 
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும்
நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல்
கொள்வதால் பயன் என்ன?.

மு.வ உரை:
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில்
பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால்
பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை:
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும்
வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று
தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல -
தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார்
செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து
வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர்.
பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல்
அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார்
முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது
செயற்பாற்றன்று என' உரைக்க.).

மணக்குடவர் உரை:
தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப்
போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது
புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

Translation:
As those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem?.

ADVERTISEMENTS
Explanation:
Like those who
leap into a stream which they know will carry them off, why should a
wife feign dislike which she knows cannot hold out long?.