அவர்வயின்விதும்பல்

திருக்குறள்:
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் 
உள்ளம் உடைந்துக்கக் கால்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து
போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக்
கூடுவதினாலோ, என்ன பயன்?.

மு.வ உரை:
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால்,
நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப்
பொருந்தினாலும் என்ன?.

சாலமன் பாப்பையா உரை:
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று
ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான்
என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம்
பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப்
பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என்? உறின்
என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை.
(இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை
வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின்,
விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை
அறிக.).

மணக்குடவர் உரை:
எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று
இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன்
என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?. இது
வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

Translation:
What's my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth?.

ADVERTISEMENTS
Explanation:
After (my
wife) has died of a broken heart, what good will there be if she is to
receive me, has received me, or has even embraced me?.