அவர்வயின்விதும்பல்

திருக்குறள்:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

மு.வ உரை:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு
வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும்
யான் உயிரோடு இருக்கின்றேன்.

சாலமன் பாப்பையா உரை:
என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும்
வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி
என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான்
விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் -
இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம்
துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை
நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன். ('உரன்' என்பது ஆகுபெயர்.
'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்',
என்பதாம்.).

மணக்குடவர் உரை:
இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே
துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன்.
இஃது அவர் வாராரென்று கூறியது.

Translation:
On victory intent, His mind sole company he went;
And I yet life sustain! And long to see his face again!.

ADVERTISEMENTS
Explanation:
still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.