நிறையழிதல்

திருக்குறள்:
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் 
கலத்தல் உறுவது கண்டு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால்
என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை
மறந்து தழுவிக் கொண்டேன்.

மு.வ உரை:
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

சாலமன் பாப்பையா உரை:
அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன்
நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல்
அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத்
தழுவினேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது
புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்;
நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின்
நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது'
என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய்
நிற்றலின் அது முடியாமை.).

மணக்குடவர் உரை:
புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப்
பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு
முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள்
கூறியது.

Translation:
'I 'll shun his greeting'; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent.

ADVERTISEMENTS
Explanation:
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!.