நிறையழிதல்

திருக்குறள்:
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் 
மறையிறந்து மன்று படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

மு.வ உரை:
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன்.
ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில்
வெளிப்படுகின்றது.

சாலமன் பாப்பையா உரை:
இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக்
கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய
வெளிப்பட்டுவிட்டது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் -
இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என்
காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து
மன்றின்கண் வெளிப்படா நின்றது. (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று
படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என்
காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள்
ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு
அவள் கூறியது.

Translation:
In womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil.

ADVERTISEMENTS
Explanation:
I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.