நெஞ்சொடுகிளத்தல்

திருக்குறள்:
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் 
உற்றால் உறாஅ தவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர்,
நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட
முடியுமா?.

மு.வ உரை:
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?.

சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு
காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு
உண்டோ?.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் -
யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ -
வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.
(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத்
தகுவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று
அவரைக் கைவிடுதல் இயல்போ?. உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன்
கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.

Translation:
O heart, as a foe, can I abandon utterly
Him who, though I long for him, longs not for me?.

ADVERTISEMENTS
Explanation:
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?.