நெஞ்சொடுகிளத்தல்

திருக்குறள்:
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் 
பைதல்நோய் செய்தார்கண் இல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத
போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால்
என்ன பயன்?.

மு.வ உரை:
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்?
இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை
இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே
இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்?
நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம்
இல்லை.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் -
நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து
அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண்
பரிந்து உள்ளல் இல் - இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக்
கருதுதல் உண்டாகாது ('நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம்
சேறலே இனித்தகுவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து
வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும்
நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின். இது வாராது வருந்துகின்றாமென்று
கூறியது.

Translation:
What comes of sitting here in pining thought, O heart? He knows
No pitying thought, the cause of all these wasting woes.

ADVERTISEMENTS
Explanation:
O my soul! why
remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts
(of you) in him who has caused you this disease of sorrow.