நெஞ்சொடுகிளத்தல்
திருக்குறள்:
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
ADVERTISEMENTS
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத
போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால்
என்ன பயன்?.
மு.வ உரை:
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்?
இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை
இல்லையே!.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே
இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்?
நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம்
இல்லை.
ADVERTISEMENTS
(இதுவும் அது.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் -
நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து
அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண்
பரிந்து உள்ளல் இல் - இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக்
கருதுதல் உண்டாகாது ('நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம்
சேறலே இனித்தகுவது' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து
வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும்
நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின். இது வாராது வருந்துகின்றாமென்று
கூறியது.
Translation:
What comes of sitting here in pining thought, O heart? He knows
No pitying thought, the cause of all these wasting woes.
ADVERTISEMENTS
O my soul! why
remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts
(of you) in him who has caused you this disease of sorrow.