உறுப்புநலனழிதல்

திருக்குறள்:
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் 
பசந்து பனிவாரும் கண்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.

மு.வ உரை:
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய
காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல்
உள்ளன.

சாலமன் பாப்பையா உரை:
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) பசந்து பனி வாரும் கண் - பசப்பெய்தன்மேல்
நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நமமால்
நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; இனி நீ
ஆற்றல் வேண்டும். (சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல்.
'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை:
முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச்
சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள்
ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி
கூறியது.

Translation:
The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover's lack of love appears.

ADVERTISEMENTS
Explanation:
The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.