கனவுநிலையுரைத்தல்

திருக்குறள்:
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் 
கண்ட பொழுதே இனிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!.

மு.வ உரை:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நனவினான் கண்டதூஉம் (இனிது) ஆங்கே - முன்
நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே;
கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும்
அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன. (இனிது' என்பது
முன்னும் கூட்டப்பட்டது. கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே,
இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு
இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு
இன்பமாம். இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள்
கூறியது.

Translation:
As what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet.

ADVERTISEMENTS
Explanation:
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.