கனவுநிலையுரைத்தல்

திருக்குறள்:
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு 
யாதுசெய் வேன்கொல் விருந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.

மு.வ உரை:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

சாலமன் பாப்பையா உரை:
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத்
தோழிக்குச் சொல்லுதல் . அக் கனவு, நனவின்கண் நினைவு மிகுதியாற்கண்டதாகலின் ,
இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது .]

(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
-யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு
என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச்
செய்வேன்? ('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது
கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.).

மணக்குடவர் உரை:
நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது
விருந்து செய்வேன்?. இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர்
வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.

Translation:
It came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare?.

ADVERTISEMENTS
Explanation:
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?.