நினைந்தவர்புலம்பல்

திருக்குறள்:
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் 
சினைப்பது போன்று கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?.

மு.வ உரை:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.

சாலமன் பாப்பையா உரை:
எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச்
சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது
போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால்
காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்:
அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத்
துமமல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை
முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.).

மணக்குடவர் உரை:
அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ: தும்மல்
தோன்றுவதுபோன்று கெடாநின்றது. தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார்
கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.

Translation:
A fit of sneezing threatened, but it passed away;
He seemed to think of me, but do his fancies stray?.

ADVERTISEMENTS
Explanation:
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.