நினைந்தவர்புலம்பல்

திருக்குறள்:
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் 
நினைப்ப வருவதொன்று ஏல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

மு.வ உரை:
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால்
வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம்
தருவதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் -
தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு
அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் -
அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண். (புணர்ந்துழியும்
பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு
உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.).

மணக்குடவர் உரை:
காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை
நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின். இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது
துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.

Translation:
How great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief.

ADVERTISEMENTS
Explanation:
Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.