நினைந்தவர்புலம்பல்
திருக்குறள்:
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.
ADVERTISEMENTS
விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.
மு.வ உரை:
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால்
வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம்
தருவதே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.
ADVERTISEMENTS
(இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் -
தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு
அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் -
அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண். (புணர்ந்துழியும்
பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு
உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.).
மணக்குடவர் உரை:
காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை
நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின். இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது
துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.
Translation:
How great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief.
ADVERTISEMENTS
Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.