தனிப்படர்மிகுதி

திருக்குறள்:
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து 
வாழ்வாரின் வன்கணார் இல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத
நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க
முடியாது.

மு.வ உரை:
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல்
உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை
உடையவர் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல்
பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர்
இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார்
உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல்
யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு
சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது
உயிர் வாழாநின்றேன் என்பதாம்.).

மணக்குடவர் உரை:
தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.

Translation:
Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they!.

ADVERTISEMENTS
Explanation:
There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.