தனிப்படர்மிகுதி
திருக்குறள்:
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
ADVERTISEMENTS
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல்
நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான்
போலும்!.
மு.வ உரை:
(காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில்
மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும்
அறியானோ?.
சாலமன் பாப்பையா உரை:
ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம்
மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும்
துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?.
ADVERTISEMENTS
(இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம்
நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று
பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப்
பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. ('விழைவும்
வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண்
வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.).
மணக்குடவர் உரை:
தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற
காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின்
நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
Translation:
While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown? .
ADVERTISEMENTS
Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?.