தனிப்படர்மிகுதி

திருக்குறள்:
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே 
வாழுநம் என்னும் செருக்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.

மு.வ உரை:
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.

சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே
(எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும்
செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம்
விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும்
செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்;
வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. ('நாம் அவரான்
வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண்
இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும். இது, தலைமகள், இருந்தாலும்
பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.

Translation:
Who love and are beloved to them alone
Belongs the boast, 'We've made life's very joys our own.'.

ADVERTISEMENTS
Explanation:
The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).