பசப்புறுபருவரல்

திருக்குறள்:
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் 
துறந்தார் அவர்என்பார் இல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இவள்
உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல்,
இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர்
இல்லையே.

மு.வ உரை:
இவள்
பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல்,
இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை:
இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
('நீ
இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள்
பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி
கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து
போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ('என்பார்' என வேறுபடுத்துக்
கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.).

மணக்குடவர் உரை:
இவள்
பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று
அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத்
தலைமகள் கூறியது.

Translation:
On me, because I pine, they cast a slur;
But no one says, 'He first deserted her.'.

ADVERTISEMENTS
Explanation:
Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".