பசப்புறுபருவரல்

திருக்குறள்:
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் 
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
விளக்கின்
ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய
காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து
விடுகிறது.

மு.வ உரை:
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

சாலமன் பாப்பையா உரை:
விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும்
அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து
நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு -
கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு.
('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு
அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.).

மணக்குடவர் உரை:
விளக்கினது
இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது
பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று
தோழிக்குத் தலைமகள் கூறியது.

Translation:
As darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace.

ADVERTISEMENTS
Explanation:
Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.