கண்விதுப்பழிதல்
திருக்குறள்:
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
ADVERTISEMENTS
காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.
மு.வ உரை:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும்
கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல்
ஊரார்க்கு அரிது அன்று.
சாலமன் பாப்பையா உரை:
அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது
வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது
இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.
ADVERTISEMENTS
It is not hard for all the town the knowledge to obtain,
When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.
ADVERTISEMENTS
It
is not difficult for the people of this place to understand the secret
of those whose eyes, like mine, are as it were beaten drums.