கண்விதுப்பழிதல்
திருக்குறள்:
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
ADVERTISEMENTS
இன்னும்
வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு
தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத்
தானே இருக்க முடியும்.
மு.வ உரை:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
சாலமன் பாப்பையா உரை:
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை.
வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும்
என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.
ADVERTISEMENTS
When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.
ADVERTISEMENTS
When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.