கண்விதுப்பழிதல்

திருக்குறள்:
 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் 
காணாது அமைவில கண்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!.

மு.வ உரை:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே
விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என்
கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!.

ADVERTISEMENTS
Translation:
Who loved me once, onloving now doth here remain;
Not seeing him, my eye no rest can gain.

ADVERTISEMENTS
Explanation:
He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.