கண்விதுப்பழிதல்

திருக்குறள்:
 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா 
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.

மு.வ உரை:
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

சாலமன் பாப்பையா உரை:
மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும்,
வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ
முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

ADVERTISEMENTS
Translation:
Those eyes have wept till all the fount of tears is dry,
That brought upon me pain that knows no remedy.

ADVERTISEMENTS
Explanation:
These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.