கண்விதுப்பழிதல்

திருக்குறள்:
 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் 
பைதல் உழப்பது எவன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?.

மு.வ உரை:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

சாலமன் பாப்பையா உரை:
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என்
மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக்
கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.

ADVERTISEMENTS
Translation:
How glancing eyes, that rash unweeting looked that day,
With sorrow measureless are wasting now away!.

ADVERTISEMENTS
Explanation:
The
dyed eyes that (then) looked without foresight, why should they now
endure sorrow, without feeling sharply (their own fault).