கண்விதுப்பழிதல்
திருக்குறள்:
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
ADVERTISEMENTS
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.
மு.வ உரை:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால்
விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல்
துன்பத்தால் வருந்துவது ஏன்?.
சாலமன் பாப்பையா உரை:
தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள்
எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது
எதற்கு?.
ADVERTISEMENTS
They showed me him, and then my endless pain
I saw: why then should weeping eyes complain?.
ADVERTISEMENTS
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).