படர்மெலிந்திரங்கல்

திருக்குறள்:
 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் 
துன்பம் அதனிற் பெரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.

மு.வ உரை:
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

சாலமன் பாப்பையா உரை:
காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.

ADVERTISEMENTS
Translation:
A happy love 's sea of joy; but mightier sorrows roll
From unpropitious love athwart the troubled soul.

ADVERTISEMENTS
Explanation:
The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.