படர்மெலிந்திரங்கல்

திருக்குறள்:
 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் 
ஏமப் புணைமன்னும் இல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.

மு.வ உரை:
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள்
மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான
படகுதான் இல்லை.

ADVERTISEMENTS
Translation:
A sea of love, 'tis true, I see stretched out before,
But not the trusty bark that wafts to yonder shore.

ADVERTISEMENTS
Explanation:
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.