பிரிவாற்றாமை

திருக்குறள்:
 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல 
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருவரையொருவர்
காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும்
உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால்
சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!.

மு.வ உரை:
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

சாலமன் பாப்பையா உரை:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?.

ADVERTISEMENTS
Translation:
Fire burns the hands that touch; but smart of love
Will burn in hearts that far away remove.

ADVERTISEMENTS
Explanation:
Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?.