பிரிவாற்றாமை

திருக்குறள்:
 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் 
இன்னாது இனியார்ப் பிரிவு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.

மு.வ உரை:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

ADVERTISEMENTS
Translation:
'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
'Tis sadder still to bid a friend beloved farewell.

ADVERTISEMENTS
Explanation:
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.