பிரிவாற்றாமை

திருக்குறள்:
 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் 
தேறியார்க்கு உண்டோ தவறு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.

மு.வ உரை:
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர்
பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு
குற்றம் உண்டோ.

சாலமன் பாப்பையா உரை:
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே,
உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான்
நம்பியது தவறோ?.

ADVERTISEMENTS
Translation:
If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred
By those who trusted to his reassuring word?.

ADVERTISEMENTS
Explanation:
If
he who bestowed his love and said "fear not" should depart, will it be
the fault of those who believed in (his) assuring words ?.