அலரறிவுறுத்தல்

திருக்குறள்:
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் 
காமம் நுதுப்பேம் எனல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது
என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப்
போன்றதாகும்.

மு.வ உரை:
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார்
எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி
நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும்.
(மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல்
கூடாது என்பதாம்.).

மணக்குடவர் உரை:
எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று
நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல். இது தலைமகன்
பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.

Translation:
With butter-oil extinguish fire! 'Twill prove
Harder by scandal to extinguish love.

ADVERTISEMENTS
Explanation:
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.