அலரறிவுறுத்தல்

திருக்குறள்:
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் 
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு,
இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத்
தரக்கூடியதாயிற்றே!.

மு.வ உரை:
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ,
(பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக
இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும்
நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது
போல் ஆயிற்று.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக்
கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப்
பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப்
பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான். (பெற்றன்ன நீர்மை:
பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற
'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை:
ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது,
பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும். இஃது
அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று
தலைமகன் கூறியது.

Translation:
The rumour spread within the town, is it not gain to me?
It is as though that were obtained that may not be.

ADVERTISEMENTS
Explanation:
Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).