நாணுத்துறவுரைத்தல்

திருக்குறள்:
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் 
மறுகின் மறுகும் மருண்டு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!.

மு.வ உரை:
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை
என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச்
சுற்றிச் சுற்றி வருகிறது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன்
அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே
வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் -
என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் -
அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு
நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.).

மணக்குடவர் உரை:
என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது
தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு
சொல்லித் திரிதல்.

Translation:
'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove.

ADVERTISEMENTS
Explanation:
My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).