நாணுத்துறவுரைத்தல்

திருக்குறள்:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் 
காமுற்றார் ஏறும் மடல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

மு.வ உரை:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

சாலமன் பாப்பையா உரை:
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது'
என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க
ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் -
அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன்.
(நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல்.
'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்',
என்பதாம்.).

மணக்குடவர் உரை:
நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.

Translation:
I once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers' 'horse of palm'.

ADVERTISEMENTS
Explanation:
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.