காதற்சிறப்புரைத்தல்

திருக்குறள்:
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே 
ஏதிலர் என்னும்இவ் வூர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை
இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை
எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்.

மு.வ உரை:
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா உரை:
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை
அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை
அன்பற்றவர் என்கின்றனர்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத்
தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) இமைப்பிற்
கரப்பார்க்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை
அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத்
துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். (தன் கருத்து
அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து,
'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்' பிரியாதவரைப் பிரிந்தார் என்று
பழிக்கற்பாலையல்லை', என்பதாம்.).

மணக்குடவர் உரை:
கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன்,
அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக
இமைக்கிலன். இது கண் துயில்மறுத்தலென்னும் மெய்ப்பாடு.

Translation:
I fear his form to hide, nor close my eyes:
'Her love estranged is gone!' the village cries.

ADVERTISEMENTS
Explanation:
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.