காதற்சிறப்புரைத்தல்

திருக்குறள்:
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் 
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.

மு.வ உரை:
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.

சாலமன் பாப்பையா உரை:
என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் -
காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால்
எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை
அறிந்து. (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது
வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக்
காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை'? என்பது
குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை:
எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர்
ஒளித்தலை யறிந்து. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம்
பெற்றிலேனென்றவா றாயிற்று.

Translation:
My love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide.

ADVERTISEMENTS
Explanation:
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.