காதற்சிறப்புரைத்தல்

திருக்குறள்:
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் 
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை
என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு
நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.

மு.வ உரை:
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

சாலமன் பாப்பையா உரை:
என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு
போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது
போன்றிருக்கிறாள்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை
உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து
உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல்
அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்; ('எனக்கு'
என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து
வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும்
அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.).

மணக்குடவர் உரை:
கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்:
நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள். இஃது இரண்டாங்கூட்டத்துப்
புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச்
சொல்லியது.

Translation:
Life is she to my very soul when she draws nigh;
Dissevered from the maid with jewels rare, I die!.

ADVERTISEMENTS
Explanation:
My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.