குறிப்பறிதல்

திருக்குறள்:
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் 
பசையினள் பைய நகும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச்
சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன்
தோன்றுகிறாள்.

மு.வ உரை:
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

சாலமன் பாப்பையா உரை:
யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க,
அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும்
அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.)
யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான்
இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்;
அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு
அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்: ஆகுபெயர்.
'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான்
நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள் அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க
இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.

Translation:
I gaze, the tender maid relents the while;
And, oh the matchless grace of that soft smile!.

ADVERTISEMENTS
Explanation:
When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.