கயமை

திருக்குறள்:
 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் 
கொல்லப் பயன்படும் கீழ்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
குறைகளைச்
சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை
நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

மு.வ உரை:
அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

சாலமன் பாப்பையா உரை:
இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர்
இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான்
கொடுப்பர்.

ADVERTISEMENTS
Translation:
The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.

ADVERTISEMENTS
Explanation:
The
great bestow (their alms) as soon as they are informed; (but) the mean,
like the sugar-cane, only when they are tortured to death.