கயமை

திருக்குறள்:
 தேவர் அனையர் கயவர் அவருந்தாம் 
மேவன செய்தொழுக லான்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

மு.வ உரை:
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:
தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

ADVERTISEMENTS
Translation:
The base are as the Gods; they too
Do ever what they list to do!.

ADVERTISEMENTS
Explanation:
The base resemble the Gods; for the base act as they like.