இரவச்சம்

திருக்குறள்:
 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் 
பார்தாக்கப் பக்கு விடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.

மு.வ உரை:
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.

ADVERTISEMENTS
Translation:
The fragile bark of beggary
Wrecked on denial's rock will lie.

ADVERTISEMENTS
Explanation:
The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.