இரவச்சம்

திருக்குறள்:
 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் 
கரப்பார் இரவன்மின் என்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.

மு.வ உரை:
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை:
பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம்
இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம்
எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

ADVERTISEMENTS
Translation:
One thing I beg of beggars all, 'If beg ye may,
Of those who hide their wealth, beg not, I pray'.

ADVERTISEMENTS
Explanation:
I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly".