இரவச்சம்

திருக்குறள்:
 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது 
உண்ணலின் ஊங்கினிய தில்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

மு.வ உரை:
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

ADVERTISEMENTS
Translation:
Nothing is sweeter than to taste the toil-won cheer,
Though mess of pottage as tasteless as the water clear.

ADVERTISEMENTS
Explanation:
Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.