இரவு

திருக்குறள்:
 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் 
உள்ளுள் உவப்பது உடைத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இழித்துப்
பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக்
காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.

மு.வ உரை:
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

ADVERTISEMENTS
Translation:
If men are found who give and no harsh words of scorn employ,
The minds of askers, through and through, will thrill with joy.

ADVERTISEMENTS
Explanation:
Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.