இரவு

திருக்குறள்:
 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் 
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இருக்கும்போது
இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார்
இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.

மு.வ உரை:
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

ADVERTISEMENTS
Translation:
Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream.

ADVERTISEMENTS
Explanation:
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself).