இரவு

திருக்குறள்:
 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை 
துன்பம் உறாஅ வரின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வழங்குபவர்,
வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள்
கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே
உண்டாகும்.

மு.வ உரை:
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

ADVERTISEMENTS
Translation:
Even to ask an alms may pleasure give,
If what you ask without annoyance you receive.

ADVERTISEMENTS
Explanation:
Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).