நல்குரவு

திருக்குறள்:
 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் 
யாதொன்றும் கண்பாடு அரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

மு.வ உரை:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை:
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

ADVERTISEMENTS
Translation:
Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.

ADVERTISEMENTS
Explanation:
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.