நல்குரவு

திருக்குறள்:
 இன்றும் வருவது கொல்லோ நெருநலும் 
கொன்றது போலும் நிரப்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

மு.வ உரை:
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

சாலமன் பாப்பையா உரை:
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.

ADVERTISEMENTS
Translation:
And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?.

ADVERTISEMENTS
Explanation:
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?.